தீக்குளியள்
————-
ஒருவர் நினைவை
ஒருவர் கொளுத்திக்கொண்டு
இருவரும் எரிவோம்
மெதுவாக
நான் மெழுகுத்திரியாக
நீ ஊதுவத்தியா
வேதனையை நான்
வெளிச்சப்படுத்துகிறேன்
நீ மணம் ஊட்ட
அணைத்தும் என்னை
மறந்துவிடும் வேதனைக்கு
உன் ஞாபகம்
சுற்றிக்கொண்டிருக்கும
*******************
சத்திர வாசம்
————–
அர்த்தங்களின் சந்தையில் நாம்
முகவரிகளைத் தொலைத்துக் கொண்டோம
திறந்திருந்ததொரு
வார்த்தையுள் நுழைந்து
தாழிட்டுக் கொண்டேன்
விளக்கையும் அணைத்துவிட்ட
மற்றொரு வார்த்தையின் கதவை
நீ தட்டுகிறாய்
என்னைக் கூவ
Friday, March 23, 2007
கதவு
கதவு
—–
பித்தன்
கதவை
மூடிக்கொண்டும்
திறந்துகொண்டும்
இருந்தான்
ஏன் இப்படிச்
செய்கிறாய்?
என்று கேட்டேன
கதவு
திறப்பதற்கா?
மூடுவதற்கா? என்று
அவன் கேட்டான்
அவன் மேலும் சொன்னான்
கதவுகள்
சில நேரம்
இமைகளாகத்
தெரிகின்றன
சில நேரம்
பூ விதழ்களாக
மலர்கின்றன
சில நேரம்
உதடுகளாகின்றன
பயணம் முடிந்து
வீடு திரும்புகிறவனுக்கும்
சிறையில் கிடப்பவனுக்கும்
கதவு திறப்பது என்பது
ஒரே அர்த்தம் உடையதல்ல
கதவுகளுக்கும்
சிறகுகளுக்கும்
ஏதோ இனம் புரியாத
சம்பந்தம் இருக்கிறது
கதவின்
திறப்பிலும்
மூடலிலும்
கேள்வியும் பதிலும்
இருக்கிறது
கதவுகளில்
சந்திப்பும் இருக்கிறது
பிரிவும் இருக்கிறது
நாம்
உள்ளே இருக்கிறோமா?
வெளியே இருக்கிறோமா?
என்பதைக்
கதவுகளே தீர்மானிக்கின்றன
நாம்
கதவு எண்களில்
வசிக்கிறோம்
மூடிய கதவு
உள்ளே இருப்பவற்றின்
மதிப்பை
கூட்டுகிறது
நம்
வீட்டுக்கு மட்டுமல்ல
நமக்கும்
கதவுகள் உண்டு
நாம்
நமக்குள்ளேயே செல்லவும்
நம்மைவிட்டு வெளியேறவும்
ஜனனத்தில்
ஒருகதவு
திறக்கிறது
மரணத்தில்
ஒரு கதவு
திறக்கிறது
இரண்டிலும் நாம்
பிரவேசிக்கிறோமா
வெளியேறுகிறோமா
கதவுதட்டும்
ஓசை கேட்டால்
‘யார்' என்று
கேட்காதே
ஒரு வேளை அது
நீயாக இருக்கலாம்
—–
பித்தன்
கதவை
மூடிக்கொண்டும்
திறந்துகொண்டும்
இருந்தான்
ஏன் இப்படிச்
செய்கிறாய்?
என்று கேட்டேன
கதவு
திறப்பதற்கா?
மூடுவதற்கா? என்று
அவன் கேட்டான்
அவன் மேலும் சொன்னான்
கதவுகள்
சில நேரம்
இமைகளாகத்
தெரிகின்றன
சில நேரம்
பூ விதழ்களாக
மலர்கின்றன
சில நேரம்
உதடுகளாகின்றன
பயணம் முடிந்து
வீடு திரும்புகிறவனுக்கும்
சிறையில் கிடப்பவனுக்கும்
கதவு திறப்பது என்பது
ஒரே அர்த்தம் உடையதல்ல
கதவுகளுக்கும்
சிறகுகளுக்கும்
ஏதோ இனம் புரியாத
சம்பந்தம் இருக்கிறது
கதவின்
திறப்பிலும்
மூடலிலும்
கேள்வியும் பதிலும்
இருக்கிறது
கதவுகளில்
சந்திப்பும் இருக்கிறது
பிரிவும் இருக்கிறது
நாம்
உள்ளே இருக்கிறோமா?
வெளியே இருக்கிறோமா?
என்பதைக்
கதவுகளே தீர்மானிக்கின்றன
நாம்
கதவு எண்களில்
வசிக்கிறோம்
மூடிய கதவு
உள்ளே இருப்பவற்றின்
மதிப்பை
கூட்டுகிறது
நம்
வீட்டுக்கு மட்டுமல்ல
நமக்கும்
கதவுகள் உண்டு
நாம்
நமக்குள்ளேயே செல்லவும்
நம்மைவிட்டு வெளியேறவும்
ஜனனத்தில்
ஒருகதவு
திறக்கிறது
மரணத்தில்
ஒரு கதவு
திறக்கிறது
இரண்டிலும் நாம்
பிரவேசிக்கிறோமா
வெளியேறுகிறோமா
கதவுதட்டும்
ஓசை கேட்டால்
‘யார்' என்று
கேட்காதே
ஒரு வேளை அது
நீயாக இருக்கலாம்
அந்தப்புரங்களில்….
நினைவுகளில் சூலாகி
நினைவுகளில் புதைந்து
கணந்தோறும் - எனக்குப்
புதுப்புது அவதாரங்கள்
எண்ணங்களை சுவாசித்து
எண்ணங்களில் நான்றுகொண்டு
பொழுதுக்கும்
வாழ்வோடு கண்ணாமூச்சி
குப்பையைக் கிளராமல்
துயிலை அடைக்காகவே
அமரும் இமைகள்
நரம்புகளின் காம அழைப்பை
அலட்சியம் செய்து
நெருப்புக் காய்களால்
சதுரங்கமாடும் விரல்கள்
ஒட்டடைக் கோலிலேயே
வலைபின்னும் சிலந்தி நான்
சிக்குகின்ற ஈயும் நான்
- அப்துல் ரகுமான் (பால்வீதி)
நினைவுகளில் புதைந்து
கணந்தோறும் - எனக்குப்
புதுப்புது அவதாரங்கள்
எண்ணங்களை சுவாசித்து
எண்ணங்களில் நான்றுகொண்டு
பொழுதுக்கும்
வாழ்வோடு கண்ணாமூச்சி
குப்பையைக் கிளராமல்
துயிலை அடைக்காகவே
அமரும் இமைகள்
நரம்புகளின் காம அழைப்பை
அலட்சியம் செய்து
நெருப்புக் காய்களால்
சதுரங்கமாடும் விரல்கள்
ஒட்டடைக் கோலிலேயே
வலைபின்னும் சிலந்தி நான்
சிக்குகின்ற ஈயும் நான்
- அப்துல் ரகுமான் (பால்வீதி)
கொடுக்கல்
கொடுக்கல்
—————
கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
கொடுப்பதற்கு நீ யார்?
நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?
உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்
உனக்காக மட்டும்
கொடுக்கப்பட்டதல்ல
உண்மையில் நீ கொடுக்கவில்லை
உன் வழியாகக்
கொடுக்கப்படுகிறது
நீ ஒரு கருவியே
இசையைப்
புல்லாங்குழல்
கொடுப்பதில்லை
இசை வெளிப்படுவதற்கு
அது ஒரு கருவியே
இயற்கையைப் பார்
அது கொடுக்கிறோம் என்று நினைத்துக்
கொடுப்பதில்லை
தேவையுள்ளவன்
அதிலிருந்து
வேண்டியதை
எடுத்துக்கொள்கிறான்
நீயும் இயற்கையின்
ஓர் அங்கம் என்பதை
மறந்துவிடாதே
கொடுப்பதற்குரியது
பணம் மட்டும் என்று
நினைக்காதே
உன் வார்த்தையும்
ஒருவனுக்குத்
தாகம் தணிக்கலாம்
உன் புன்னகையும்
ஒருவன் உள்ளத்தில்
விளக்கேற்றலாம்
ஒரு பூவைப் போல்
சப்தமில்லாமல் கொடு
ஒரு விளக்கைப் போல
பேதமில்லாமல் கொடு
உன்னிடம் உள்ளது
நதியில் உள்ள நீர்போல்
இருக்கட்டும்
தாகமுடையவன் குடிக்கத்
தண்ணீரிடம்
சம்மதம் கேட்பதில்லை
கொடு
நீ சுத்தமாவாய்
கொடு
நீ சுகப்படுவாய்
கொடு
அது உன் இருத்தலை
நியாப்படுத்தும
- அப்துல் ரகுமான் (சாகித்ய அகாடெமி விருது பெற்ற ஆலாபனை தொகுப்பிலிருந்து)
—————
கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
கொடுப்பதற்கு நீ யார்?
நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?
உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்
உனக்காக மட்டும்
கொடுக்கப்பட்டதல்ல
உண்மையில் நீ கொடுக்கவில்லை
உன் வழியாகக்
கொடுக்கப்படுகிறது
நீ ஒரு கருவியே
இசையைப்
புல்லாங்குழல்
கொடுப்பதில்லை
இசை வெளிப்படுவதற்கு
அது ஒரு கருவியே
இயற்கையைப் பார்
அது கொடுக்கிறோம் என்று நினைத்துக்
கொடுப்பதில்லை
தேவையுள்ளவன்
அதிலிருந்து
வேண்டியதை
எடுத்துக்கொள்கிறான்
நீயும் இயற்கையின்
ஓர் அங்கம் என்பதை
மறந்துவிடாதே
கொடுப்பதற்குரியது
பணம் மட்டும் என்று
நினைக்காதே
உன் வார்த்தையும்
ஒருவனுக்குத்
தாகம் தணிக்கலாம்
உன் புன்னகையும்
ஒருவன் உள்ளத்தில்
விளக்கேற்றலாம்
ஒரு பூவைப் போல்
சப்தமில்லாமல் கொடு
ஒரு விளக்கைப் போல
பேதமில்லாமல் கொடு
உன்னிடம் உள்ளது
நதியில் உள்ள நீர்போல்
இருக்கட்டும்
தாகமுடையவன் குடிக்கத்
தண்ணீரிடம்
சம்மதம் கேட்பதில்லை
கொடு
நீ சுத்தமாவாய்
கொடு
நீ சுகப்படுவாய்
கொடு
அது உன் இருத்தலை
நியாப்படுத்தும
- அப்துல் ரகுமான் (சாகித்ய அகாடெமி விருது பெற்ற ஆலாபனை தொகுப்பிலிருந்து)
உதிரும் சிறகுகள் - அப்துல் ரகுமான்
உதிரும் சிறகுகள் - அப்துல் ரகுமான்
மழை ஓய்ந்த
முன்னிரவில்
சாளரத்தின் வழியே
அறையில் புகுந்து
மின் விளக்கை
மொய்த்து
முட்டி மோதி
சிறகுகள் உதிர்த்து விழும்
ஈசல் கூட்டம
காலையில்
திட்டியபடியே
செத்த உடல்களோடு
சிறகுகள் கூட்டிக்
குப்பையில் எறிந்து -
ஏதோ இருளை
மோகித்து
ஏதோ சாளர வழியே
நுழைந்து
சிறகுகள்
உதிர்க்கப் போவோம்
நாம்.
அப்துல் ரகுமான்
தொகுப்பு - சுட்டுவிரல
மழை ஓய்ந்த
முன்னிரவில்
சாளரத்தின் வழியே
அறையில் புகுந்து
மின் விளக்கை
மொய்த்து
முட்டி மோதி
சிறகுகள் உதிர்த்து விழும்
ஈசல் கூட்டம
காலையில்
திட்டியபடியே
செத்த உடல்களோடு
சிறகுகள் கூட்டிக்
குப்பையில் எறிந்து -
ஏதோ இருளை
மோகித்து
ஏதோ சாளர வழியே
நுழைந்து
சிறகுகள்
உதிர்க்கப் போவோம்
நாம்.
அப்துல் ரகுமான்
தொகுப்பு - சுட்டுவிரல
தொலைந்து போனவர்கள் - அப்துல் ரகுமான்
தொலைந்து போனவர்கள் - அப்துல் ரகுமான்
விடிந்ததென்பாய் நீ அனுதினமும் - வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை - இங்கு
முடிதல் என்பது எதற்குமில்ல
மணந்தேன் என்பாய் சடங்குகளும் - வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால் - உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.
கற்றேன் என்பாய் கற்றாயா? - வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? - வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்
குளித்தேன் என்பாய் யுகயுகமாய் - நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே - நீ
அளித்த தெதுவும் உனதல்
உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் - வெறும்
உடலுக் கணிவது உடையல்ல
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் - ஒரு
வினாவாய் நீயே நிற்கின்றாய
தின்றேன் என்பாய் அணுஅணுவாய் - உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பர் மனிதரெல்லாம் - பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார
ஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய் - உன்
அசலைச் சந்தையில் விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் - உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய
‘நான்’ என்பாய் அது நீயில்லை - வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்
‘ஏன்’? என்பாய் இது கேள்வியில்லை - அந்த
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு?
- அப்துல் ரகுமான் (தொகுப்பு - சுட்டுவிரல்)
விடிந்ததென்பாய் நீ அனுதினமும் - வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை - இங்கு
முடிதல் என்பது எதற்குமில்ல
மணந்தேன் என்பாய் சடங்குகளும் - வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால் - உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.
கற்றேன் என்பாய் கற்றாயா? - வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? - வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்
குளித்தேன் என்பாய் யுகயுகமாய் - நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே - நீ
அளித்த தெதுவும் உனதல்
உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் - வெறும்
உடலுக் கணிவது உடையல்ல
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் - ஒரு
வினாவாய் நீயே நிற்கின்றாய
தின்றேன் என்பாய் அணுஅணுவாய் - உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பர் மனிதரெல்லாம் - பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார
ஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய் - உன்
அசலைச் சந்தையில் விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் - உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய
‘நான்’ என்பாய் அது நீயில்லை - வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்
‘ஏன்’? என்பாய் இது கேள்வியில்லை - அந்த
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு?
- அப்துல் ரகுமான் (தொகுப்பு - சுட்டுவிரல்)
அப்துல் ரகுமான் இலக்கியமான்
கவிக்கோ அப்துல் இரகுமான்.
"இரவுக்கு
தாலாட்டு பாடுகின்றனவா
சில்வண்டுகள்?"
இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் அப்துல் இரகுமான்.செல்லமாக கவிக்கோ.மதுரை மண்ணில் முளைத்த கவிவிருட்சம்.பெற்றோரும் கவிஞர்களே,ஆனால் உருது.அதுவும் நல்லதற்குத்தான்,அவர் உருது மொழியின் பலத்தை தமிழில் apply செய்ய அது உதவியது.மெல்லிய பிரெஞ்சு தாடியோடு ஜிப்பா அணிந்த கண்ணாடிக்காரர்.ஒளிபடைத்த கண்ணினார்,மதுரையின் கார்வண்ணத்தை தோலில் கொண்டவர்.கடைசி புத்தகம்:இது சிறகுகளின் நேரம்,இந்த கணநொடி வரை மூச்சுவிடுகிறார்.முப்பது ஆண்டுகளாக கவிதை எழுதிவருகிறார்,பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவருமாவார்.
தமிழ் படிப்பித்த ஆசிரியரான அவர் தமிழில் கஜல் எழுதலானார்.மரபுக்கவிகளை எழுதிக்கொண்டிருந்தவர் மெல்ல புதுக்கவிதைகளுக்கு தடம் மாறினார்.
ஹைக்கூ கவிதைகளை தமிழுக்கு கொண்டுவந்தார்.அதைப்பற்றி அவர் ஜூனியர் விகடனில் எழுதிய கட்டுரை மிகப்பிரபலம்.அதன் தலைப்பு:மின்மினிகள்.இந்நிலையில் அவரது முதல் கவிதைத்தொகுப்பாக வெளிவந்தது பால்வீதி.மிகப்பெரிய வரவேற்பைப்பெற்ற அந்த புத்தகம்,தமிழில்க்கியத்தின் மற்றுமோர் பரிமாணமாய் ஒளிர்ந்தது.
அந்த காலகட்டம் புதுக்கவிஞர்களும் மரபுக்கவிஞர்களும் போரிட்டுக்கொண்டிருந்த தருணம்.மேத்தா,வாலி,வைரமுத்து,இன்குலாப் ஆகியோருடன் அந்த போர்க்களத்தில் இரகுமானும் புதுக்கவிதை வாள் வீசினார்.அந்த renaissance-க்கு பிறகு தான் தன் கவிதைகளின் பால் தமிழ் நெஞ்சங்களை ஆண்டார் அப்துல் இரகுமான்.
இரகுமான் வாணியம்பாடி கல்லூரியில் பேராசிரியராக இருந்த சமயம் பற்பல ஆய்வுகள் நிகழ்த்தினார்.அவற்றுள் "புதுக்கவிதையில் குறியீடு" என்ற ஆய்வு அவருக்கு டாக்டர் பட்டத்தை அளித்தது.தொடர்ந்து சர்ரியலிசம் என்ற தலைப்பிலும் அவரது ஆய்வுகள் இருந்தன.ஆங்கிலக்கவிஞர்களான ஷெல்லி,கலீல் ஜிப்ரான் ஆகியோர் இவரது விருப்பத்துக்குரியவர்கள்.தீவிர இசுலாமியரான இவர்,தன் உரைகளில் தவறாமல் நபிகளின் மொழியொன்றை சமர்ப்பிப்பார்.குறிப்பாக தமிழில் யாராலும் தீண்டப்படாத சூஃபி கருத்துக்களும்,ஜென் தத்துவங்களும்,சீன மதபோதனைகளும் கவிக்கோவால் தமிழுக்கு பெயர்க்கப்பட்டன.அது மட்டுமின்றி உபனிஷதமும்,நான்மறையையும் கூட கற்றவர் ரகுமான்.கல்லூரியிலேயே சங்கத்தமிழை படித்துவிட்டிருந்தார்.அனைத்து கவி வடிவங்களையும் பரீட்சார்த்த முயற்சியில் பயின்றும் வைத்திருந்த ரகுமான் உண்மையிலேயே தமிழை சுவாசித்தவர்.
பேராசிரியராக இருந்தபோதே தன் மாணவர்களிடையே வகுப்புகளினூடே கவிராத்திரி என்ற பெயரில் தமிழை மாணவர்களுக்கும் பருகினார்.அவரே கவியரங்குகளில் பங்கேற்கவும் செய்தார்.ஒருமுறை கலைஞர் கருணாநிதி தலைமையேற்ற அரங்கத்தில் வாசித்த கவிதை கருணாநிதியை கவர,அதன் பின் கலைஞரின் அனைத்து அரங்குகளுக்கும்,அன்னாரிடமிருந்து கவிக்கோவுக்கு அழைப்பு போயிற்று.மெல்ல கழகக்கவிஞராகவே இரகுமான் அறியப்பட்டாலும்கூட தன் தனித்த்ன்மையை அவர் இழந்துவிடவில்லை.அதுவே இன்றுவரை அவர் ஒழுகி வரும் இன்பம் கலந்த மாண்பு.
இரகுமானின் சேவையை பாராட்டி அவருக்கு தமிழன்னை விருது வழங்கப்பெற்றது.மேலும் கவிஞர் விருதாக 1 இலட்சம் ரொக்கமும் தரப்பெற்றது.மேலும் இந்தியாவின் மிக உயரிய இலக்கிய அங்கீகாரமான சாகித்ய அகாதமியும் வழங்கப்பெற்றது.இத்துணை ஆண்டுகளாக இலக்கிய சேவை புரிந்துகொண்டிருந்த அப்துல் இரகுமான் ஓர் இலக்கிய இதழ் ஆரம்பித்தார்.அதன் பெயர் பித்தன்.அதில் அவர் இயற்றிய ஹைக்கூ ஒன்று.
"புத்தகங்களே
சமர்த்தாய் இருங்கள்
பிள்ளைகளை கிழித்துவிடாதீர்கள்"
இந்த ஒரு படைப்பின் மூலமாக அவரது மொழிப்புலமையும்,மேதமையும் விளங்கும்.மெய்யில் பிள்ளைகளும் புத்தகங்களும் இடம் மாறி இருக்கவேண்டும்,ஆனால் அதை நிரல்நிரை மாற்றி ஒரு அற்புதமான கருத்தினை வெறும் இயல்பான சொற்கள் கொண்டு விளக்கியிருப்பது மேதமை தானே?கவிக்கோ இன்றைய தமிழிலக்கிஅப் பரப்பில் கவிதைகளின் நவீனத்துவதிற்கான அடிகோல் என்றால் அது மிகையல்ல.ஏனென்றால் அவர் தன் கவிதைகளில் கருத்தாழமும்,இயல்பும் ஒளித்து வைத்திருந்தார்.
கவியரசு கண்ணதாசனே இரகுமானை தென்னகத்து கலீல் ஜிப்ரான் என்று அழைக்குமளவு தன்னகத்தே இருந்த திறமையை அடக்கமாக எழுத்துக்களால் மெய்ப்பித்திருக்கிறார்.தன்னுடைய சுதந்திரத்தை பறித்துவிடக்கூடும் என்று அஞ்சி அவர் திரையுலகின் பக்கம் தலை வைத்து படுக்கவில்லை.எனினும் தமிழ் வாழும் வரை இரகுமான் வாழ்வார்,
அவரது எழுத்துகளின் சாட்சியாக.
நன்றி வலைப் பூ நண்பர்
"இரவுக்கு
தாலாட்டு பாடுகின்றனவா
சில்வண்டுகள்?"
இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் அப்துல் இரகுமான்.செல்லமாக கவிக்கோ.மதுரை மண்ணில் முளைத்த கவிவிருட்சம்.பெற்றோரும் கவிஞர்களே,ஆனால் உருது.அதுவும் நல்லதற்குத்தான்,அவர் உருது மொழியின் பலத்தை தமிழில் apply செய்ய அது உதவியது.மெல்லிய பிரெஞ்சு தாடியோடு ஜிப்பா அணிந்த கண்ணாடிக்காரர்.ஒளிபடைத்த கண்ணினார்,மதுரையின் கார்வண்ணத்தை தோலில் கொண்டவர்.கடைசி புத்தகம்:இது சிறகுகளின் நேரம்,இந்த கணநொடி வரை மூச்சுவிடுகிறார்.முப்பது ஆண்டுகளாக கவிதை எழுதிவருகிறார்,பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவருமாவார்.
தமிழ் படிப்பித்த ஆசிரியரான அவர் தமிழில் கஜல் எழுதலானார்.மரபுக்கவிகளை எழுதிக்கொண்டிருந்தவர் மெல்ல புதுக்கவிதைகளுக்கு தடம் மாறினார்.
ஹைக்கூ கவிதைகளை தமிழுக்கு கொண்டுவந்தார்.அதைப்பற்றி அவர் ஜூனியர் விகடனில் எழுதிய கட்டுரை மிகப்பிரபலம்.அதன் தலைப்பு:மின்மினிகள்.இந்நிலையில் அவரது முதல் கவிதைத்தொகுப்பாக வெளிவந்தது பால்வீதி.மிகப்பெரிய வரவேற்பைப்பெற்ற அந்த புத்தகம்,தமிழில்க்கியத்தின் மற்றுமோர் பரிமாணமாய் ஒளிர்ந்தது.
அந்த காலகட்டம் புதுக்கவிஞர்களும் மரபுக்கவிஞர்களும் போரிட்டுக்கொண்டிருந்த தருணம்.மேத்தா,வாலி,வைரமுத்து,இன்குலாப் ஆகியோருடன் அந்த போர்க்களத்தில் இரகுமானும் புதுக்கவிதை வாள் வீசினார்.அந்த renaissance-க்கு பிறகு தான் தன் கவிதைகளின் பால் தமிழ் நெஞ்சங்களை ஆண்டார் அப்துல் இரகுமான்.
இரகுமான் வாணியம்பாடி கல்லூரியில் பேராசிரியராக இருந்த சமயம் பற்பல ஆய்வுகள் நிகழ்த்தினார்.அவற்றுள் "புதுக்கவிதையில் குறியீடு" என்ற ஆய்வு அவருக்கு டாக்டர் பட்டத்தை அளித்தது.தொடர்ந்து சர்ரியலிசம் என்ற தலைப்பிலும் அவரது ஆய்வுகள் இருந்தன.ஆங்கிலக்கவிஞர்களான ஷெல்லி,கலீல் ஜிப்ரான் ஆகியோர் இவரது விருப்பத்துக்குரியவர்கள்.தீவிர இசுலாமியரான இவர்,தன் உரைகளில் தவறாமல் நபிகளின் மொழியொன்றை சமர்ப்பிப்பார்.குறிப்பாக தமிழில் யாராலும் தீண்டப்படாத சூஃபி கருத்துக்களும்,ஜென் தத்துவங்களும்,சீன மதபோதனைகளும் கவிக்கோவால் தமிழுக்கு பெயர்க்கப்பட்டன.அது மட்டுமின்றி உபனிஷதமும்,நான்மறையையும் கூட கற்றவர் ரகுமான்.கல்லூரியிலேயே சங்கத்தமிழை படித்துவிட்டிருந்தார்.அனைத்து கவி வடிவங்களையும் பரீட்சார்த்த முயற்சியில் பயின்றும் வைத்திருந்த ரகுமான் உண்மையிலேயே தமிழை சுவாசித்தவர்.
பேராசிரியராக இருந்தபோதே தன் மாணவர்களிடையே வகுப்புகளினூடே கவிராத்திரி என்ற பெயரில் தமிழை மாணவர்களுக்கும் பருகினார்.அவரே கவியரங்குகளில் பங்கேற்கவும் செய்தார்.ஒருமுறை கலைஞர் கருணாநிதி தலைமையேற்ற அரங்கத்தில் வாசித்த கவிதை கருணாநிதியை கவர,அதன் பின் கலைஞரின் அனைத்து அரங்குகளுக்கும்,அன்னாரிடமிருந்து கவிக்கோவுக்கு அழைப்பு போயிற்று.மெல்ல கழகக்கவிஞராகவே இரகுமான் அறியப்பட்டாலும்கூட தன் தனித்த்ன்மையை அவர் இழந்துவிடவில்லை.அதுவே இன்றுவரை அவர் ஒழுகி வரும் இன்பம் கலந்த மாண்பு.
இரகுமானின் சேவையை பாராட்டி அவருக்கு தமிழன்னை விருது வழங்கப்பெற்றது.மேலும் கவிஞர் விருதாக 1 இலட்சம் ரொக்கமும் தரப்பெற்றது.மேலும் இந்தியாவின் மிக உயரிய இலக்கிய அங்கீகாரமான சாகித்ய அகாதமியும் வழங்கப்பெற்றது.இத்துணை ஆண்டுகளாக இலக்கிய சேவை புரிந்துகொண்டிருந்த அப்துல் இரகுமான் ஓர் இலக்கிய இதழ் ஆரம்பித்தார்.அதன் பெயர் பித்தன்.அதில் அவர் இயற்றிய ஹைக்கூ ஒன்று.
"புத்தகங்களே
சமர்த்தாய் இருங்கள்
பிள்ளைகளை கிழித்துவிடாதீர்கள்"
இந்த ஒரு படைப்பின் மூலமாக அவரது மொழிப்புலமையும்,மேதமையும் விளங்கும்.மெய்யில் பிள்ளைகளும் புத்தகங்களும் இடம் மாறி இருக்கவேண்டும்,ஆனால் அதை நிரல்நிரை மாற்றி ஒரு அற்புதமான கருத்தினை வெறும் இயல்பான சொற்கள் கொண்டு விளக்கியிருப்பது மேதமை தானே?கவிக்கோ இன்றைய தமிழிலக்கிஅப் பரப்பில் கவிதைகளின் நவீனத்துவதிற்கான அடிகோல் என்றால் அது மிகையல்ல.ஏனென்றால் அவர் தன் கவிதைகளில் கருத்தாழமும்,இயல்பும் ஒளித்து வைத்திருந்தார்.
கவியரசு கண்ணதாசனே இரகுமானை தென்னகத்து கலீல் ஜிப்ரான் என்று அழைக்குமளவு தன்னகத்தே இருந்த திறமையை அடக்கமாக எழுத்துக்களால் மெய்ப்பித்திருக்கிறார்.தன்னுடைய சுதந்திரத்தை பறித்துவிடக்கூடும் என்று அஞ்சி அவர் திரையுலகின் பக்கம் தலை வைத்து படுக்கவில்லை.எனினும் தமிழ் வாழும் வரை இரகுமான் வாழ்வார்,
அவரது எழுத்துகளின் சாட்சியாக.
நன்றி வலைப் பூ நண்பர்
Friday, March 9, 2007
கவியரங்கத்தில் கவிக்கோ
எனக்கொரு
சந்தேகம
உன்னை
எங்கள் மூச்சு
என்றார
அப்படியென்றால்
நாம் செத்துப்போனது
எப்படி?
உன்னை
வாங்கிய நாம்
பிறகு
விட்டு விட்டோமா?
மேல்வாய்
பிரசவித்த
மெல்லிய ஒலி
வளர்ந்து
பருவமுற்றபோது
பைந்தமிழே
நீ பிறந்தாய
முப்பதே
ஒலிகளுக்குள்
முழு உலகம்
அளப்பவளே
உன்னைப்போல்
எப்போதும்
உயிர் மெய்யோடு
இயங்குகின்ற மொழி எது?
குறிஞ்சியிலே
வாழைக்குமரியாய்
உதித்தவள
முல்லையிலே
மலர்ந்து
முழுமலராய்
சிரித்தவள
மருதத்தில்
போகத்தால்
மசக்கை
கொண்டவள
நெய்தலிலே
காவியங்கள்
நெய்தவள
ஈரமற்ற
பாறையிலும்
பூத்த மணிமலர
பாடயிலே
தேவர்களின்
பாடைகள்
போனபின்னும
உன் செய்
பாடயிலே
ஆடயிலே
படிப்படியாய்
வளர்ந்தவள
வாயின்
சுவாசமே
வயிறார
தித்திக்கும்
கனிச்சுவைய
எங்கள்
காதருந்தும்
கள்ள
எம்மொழி
செம்மொழி
எனக்கேட்டால
தலைநிமிர்ந்து
எம்மொழி
செம்மொழி
எனச்சொல்லும்
புகழ் கொடுத்தாய
செத்த மொழிகள்
இங்கு
சிம்மாசனம் ஏற
உயிர் மெய்யோடு
இருந்த உயர்ந்த
மொழி
தமிழ்மொழிக்கோ
தாமதமாகவே
செம்மொழி
சிம்மாசனம் கிடைத்தத
இதற்கு
தமிழன்
தூங்கி
கிடந்ததுதான்
காரணம
தான்
ஆடாவிட்டாலும்
பரவாயில்லை
தமிழ்
ஆடவேண்டும்
என்று
நினைக்கும்
கலைஞர்
இல்லையென்றால்
இதுகூட
நடந்திருக்காத
தமிழே
நீ
தீயாலே
கொஞ்சம்
தீந்தாய
கடல்
என்னும்
பேயாலே
பேரழிவை
பெற்றாய
கரையானின்
வாயாலே
கொஞ்சம்
கரைந்தாய
வத்தவந்த
அயல்மொழியின்
நோயாலே
நலம்
கெட்டு
நொந்தாய
இன்றோ
உன்
சேயாலே
சீரழிந்து
தேம்பி
அழுகின்றாய
தமிழே
உன்னிடத்தில்
உயிரெழுத்தை
கற்றோமே
உயிர் பெற்று எழுந்தோம
மெய்யழுத்தை
கற்றோமே
மெய்யெழுத கற்றோம
நீ
ஆயுதமும்
உயிர் என்றாய
அதை மறந்து
போனதனால்
பகைவர்களிடம்
தோற்றுவிட்டோம
பத்துப்பாட்டு
என்றால்
பதறுகிறோம்
திரைப்படத்தில்
குத்துப்பாட்டு
என்றால்
குதூகலமாய்
ஆடுகிறோம
எட்டுத்தொகை
பெற்று
இறுமாந்து
இருந்த
இனம்
சுற்றித்
தொகைக்கு
எல்லாம்
தொலைத்து
விட்டு
இருக்கின்றோம
அன்றோ
குரல் என்ற
உன்
ஈரடியை
வணங்கியது
உலகம
இன்றோ
யார் என்ற
விவஸ்தை கூட
இல்லாமல்
இனப்பகைவர்
காலடியில்
விழுவதுதான்
தமிழரின்
கலாச்சாரம்
உன்
சிலம்பம்
அதிகாரம்
செய்தது
அன்ற
இன்றோ
அதிகாரக்கால்களில்
சிலம்பாகி
கிடக்கிறான்
தமிழன
பரன்குணம்
படைத்த
பரம்பர
இன்று உன்னை
பரணிலே
போட்டுவிட்டு
பாதையெல்லாம்
நடக்கிறத
பிள்ளைத்தமிழ்
பேச பேரின்பம்
கொண்டவளே
இன்று
உன்
பிள்ளைகள்
பேசும் பேச்சிலே
நீ இல்ல
இமயத்தில்
கொடியேற்றி
இறுமாந்து
நின்றவன
சமயக்கொடியேற்றி
சகதியிலே
விழுந்துவிட்டான
புலிக்கொடியை
பறக்கவிட்டு புகழோடு
வாழ்ந்தவன்தான
புலியென்று
சொன்னாலே
புலியமரம்
ஏறுகின்றான
மூதறிஞர்
தந்த
முப்பால்
இருக்
நாற்பால்
என்ற நச்சுப்பால்
குடிக்கின்றான
நெற்கொடியை
பறக்கவிட்ட
வீரன்தான
இந்த
வில்லுப்பாட்டு
பாடி
வீணர்களை
புகழுகின்றான
கங்கைகொண்டவன்தான்
இன்று
காவிரியையும்
இழந்துவிட்டு
கையை
பிசைந்து
நிற்கிறான
முப்படையால்
நான்கு
திசைகளையும்
வென்றவன
சாதி
சமயம்
கட்சி
என்ற
முப்படையால்
தோற்று
முகவரியை
இழந்துவிட்டான
தாய்ப்பாலுக்கு
அப்பால்
உன்
தனப்பாலை
குடித்ததொரு
ஒரு
வாய்ப்பால்
வளர்ந்தவன்
மகன
வஞ்சகப்
போதையின்
நோய்ப்பால்
அருந்தி
நூதனமாய்
சாகின்றான
உன்னை
மொழிகளுக்கெல்லாம்
முதன் மொழி என்றாய்
அதனால்
உன்னை முதலாக
போட்டு வியாபாரம்
தொடங்கிவிட்டான
தமிழன்
சீழ்பிடித்த
கொப்புளங்களை
எல்லாம்
தாயின்
மார்பகங்களாய்
நினைக்கிறான
அன்று நீ
சங்கப்பலகை என்னும்
அரியாசனத்தில் அழகியாய்
வீற்றிருந்தாய
இன்றோ
எங்கள்
கடைப்பலகையில் கூட
நீ கால்வைக்க
இடமில்ல
கோயிலுக்குள்ளே
நீ குடியேற
முடியவில்ல
வாயிலுக்கு
வெளியே
உன்னை
வைத்துவிட்டு
செல்கின்றார்
செருப்பை போ
வழக்காடு
மன்றத்தில்
குற்றவாளிகளுக்கு
கூட
கூண்டுகள்
உண்ட
நீ
நுழையமட்டும்
அனுமதியில்ல
அம்மா தாயே
என்னும்
பிச்சைகாரர்
வாயில்
மட்டும்தான்
நீ இருக்கின்றாய
தெருவெங்கும்
தமிழ் முழக்கம்
செழிக்கச்செய்வோம்
என்ற பாரதிய
உன் கனவை
நாங்கள்
நிறைவேற்றி
வைத்துவிட்டோம
வந்து பார்
இப்போது
தமிழ்
தெருவில்தான்
நிற்கிறத
தமிழனுக்கு
தேசிய
கீதமே
தாலாட்டுதான
மதம்
சாதி
திரைப்படம்
என்று
இவனுக்குதான்
எத்தனை
படுக்கைகள
தமிழன்
ஒன்று
கும்பகர்ணனாக
இருக்கிறான்
இல்லையென்றால்
வீடணாக
இருக்கிறான
இளைஞனிடம்
விழிப்புணர்ச்சி
வேண்டுமென்றால
நாங்கள்தான்
பெண்களை
கண்டால்
விழி புணர்ச்சி
செய்கிறோமே
என்கிறான
தமிழன்
விழித்திருக்கும்
போது கூட
திரைப்பட அரங்குகள்
என்ற இருட்டறையிலேயே
இருக்கின்றான
இவனுக்கு
பெரியதிரை
பெரிய வீடு
சின்னத்திரை
சின்ன வீட
இந்த வீடுபேற்றிற்காக
இவன்
அறத்தையும்
இழந்துவிட்டான்
பொருளையும்
இழந்துவிட்டான
அகமிழந்தான்
பொருளிழந்தான்
ஆன்மாவை
விற்றுவிட்டான்
முகமிழந்தான
தன்னுடைய
முகவரியையும்
இழந்துவிட்டான
எனக்கு
வீடெங்கே
வினையெங்க
எனக்கேட்டு நின்ற
ஏடெங்கே
எழுத்தெங்க
இன உணர்வு
பெற்றிருந்த நாடெங்கே
வீடெங்க
உன் புதல்வர்
கண்டிறிந்த
சூடெங்கே
சொரணை எங்கே
சொப்பனமாய் போனத
இந்த
நாட்டில்
நடிப்பவர்கள்தான்
தலைவர்களாகிறார்கள்
அல்லது
தலைவர்களாக
இருப்பவர்கள்
நடிக்கிறார்கள
தமிழா
விழித்துக்கொள
இல்லையென்றால்
வெள்ளித்திரைக்கென்று
உன் வேட்டியை
உருவி கொண்டு
சென்றுவிடுவார்கள்...
சந்தேகம
உன்னை
எங்கள் மூச்சு
என்றார
அப்படியென்றால்
நாம் செத்துப்போனது
எப்படி?
உன்னை
வாங்கிய நாம்
பிறகு
விட்டு விட்டோமா?
மேல்வாய்
பிரசவித்த
மெல்லிய ஒலி
வளர்ந்து
பருவமுற்றபோது
பைந்தமிழே
நீ பிறந்தாய
முப்பதே
ஒலிகளுக்குள்
முழு உலகம்
அளப்பவளே
உன்னைப்போல்
எப்போதும்
உயிர் மெய்யோடு
இயங்குகின்ற மொழி எது?
குறிஞ்சியிலே
வாழைக்குமரியாய்
உதித்தவள
முல்லையிலே
மலர்ந்து
முழுமலராய்
சிரித்தவள
மருதத்தில்
போகத்தால்
மசக்கை
கொண்டவள
நெய்தலிலே
காவியங்கள்
நெய்தவள
ஈரமற்ற
பாறையிலும்
பூத்த மணிமலர
பாடயிலே
தேவர்களின்
பாடைகள்
போனபின்னும
உன் செய்
பாடயிலே
ஆடயிலே
படிப்படியாய்
வளர்ந்தவள
வாயின்
சுவாசமே
வயிறார
தித்திக்கும்
கனிச்சுவைய
எங்கள்
காதருந்தும்
கள்ள
எம்மொழி
செம்மொழி
எனக்கேட்டால
தலைநிமிர்ந்து
எம்மொழி
செம்மொழி
எனச்சொல்லும்
புகழ் கொடுத்தாய
செத்த மொழிகள்
இங்கு
சிம்மாசனம் ஏற
உயிர் மெய்யோடு
இருந்த உயர்ந்த
மொழி
தமிழ்மொழிக்கோ
தாமதமாகவே
செம்மொழி
சிம்மாசனம் கிடைத்தத
இதற்கு
தமிழன்
தூங்கி
கிடந்ததுதான்
காரணம
தான்
ஆடாவிட்டாலும்
பரவாயில்லை
தமிழ்
ஆடவேண்டும்
என்று
நினைக்கும்
கலைஞர்
இல்லையென்றால்
இதுகூட
நடந்திருக்காத
தமிழே
நீ
தீயாலே
கொஞ்சம்
தீந்தாய
கடல்
என்னும்
பேயாலே
பேரழிவை
பெற்றாய
கரையானின்
வாயாலே
கொஞ்சம்
கரைந்தாய
வத்தவந்த
அயல்மொழியின்
நோயாலே
நலம்
கெட்டு
நொந்தாய
இன்றோ
உன்
சேயாலே
சீரழிந்து
தேம்பி
அழுகின்றாய
தமிழே
உன்னிடத்தில்
உயிரெழுத்தை
கற்றோமே
உயிர் பெற்று எழுந்தோம
மெய்யழுத்தை
கற்றோமே
மெய்யெழுத கற்றோம
நீ
ஆயுதமும்
உயிர் என்றாய
அதை மறந்து
போனதனால்
பகைவர்களிடம்
தோற்றுவிட்டோம
பத்துப்பாட்டு
என்றால்
பதறுகிறோம்
திரைப்படத்தில்
குத்துப்பாட்டு
என்றால்
குதூகலமாய்
ஆடுகிறோம
எட்டுத்தொகை
பெற்று
இறுமாந்து
இருந்த
இனம்
சுற்றித்
தொகைக்கு
எல்லாம்
தொலைத்து
விட்டு
இருக்கின்றோம
அன்றோ
குரல் என்ற
உன்
ஈரடியை
வணங்கியது
உலகம
இன்றோ
யார் என்ற
விவஸ்தை கூட
இல்லாமல்
இனப்பகைவர்
காலடியில்
விழுவதுதான்
தமிழரின்
கலாச்சாரம்
உன்
சிலம்பம்
அதிகாரம்
செய்தது
அன்ற
இன்றோ
அதிகாரக்கால்களில்
சிலம்பாகி
கிடக்கிறான்
தமிழன
பரன்குணம்
படைத்த
பரம்பர
இன்று உன்னை
பரணிலே
போட்டுவிட்டு
பாதையெல்லாம்
நடக்கிறத
பிள்ளைத்தமிழ்
பேச பேரின்பம்
கொண்டவளே
இன்று
உன்
பிள்ளைகள்
பேசும் பேச்சிலே
நீ இல்ல
இமயத்தில்
கொடியேற்றி
இறுமாந்து
நின்றவன
சமயக்கொடியேற்றி
சகதியிலே
விழுந்துவிட்டான
புலிக்கொடியை
பறக்கவிட்டு புகழோடு
வாழ்ந்தவன்தான
புலியென்று
சொன்னாலே
புலியமரம்
ஏறுகின்றான
மூதறிஞர்
தந்த
முப்பால்
இருக்
நாற்பால்
என்ற நச்சுப்பால்
குடிக்கின்றான
நெற்கொடியை
பறக்கவிட்ட
வீரன்தான
இந்த
வில்லுப்பாட்டு
பாடி
வீணர்களை
புகழுகின்றான
கங்கைகொண்டவன்தான்
இன்று
காவிரியையும்
இழந்துவிட்டு
கையை
பிசைந்து
நிற்கிறான
முப்படையால்
நான்கு
திசைகளையும்
வென்றவன
சாதி
சமயம்
கட்சி
என்ற
முப்படையால்
தோற்று
முகவரியை
இழந்துவிட்டான
தாய்ப்பாலுக்கு
அப்பால்
உன்
தனப்பாலை
குடித்ததொரு
ஒரு
வாய்ப்பால்
வளர்ந்தவன்
மகன
வஞ்சகப்
போதையின்
நோய்ப்பால்
அருந்தி
நூதனமாய்
சாகின்றான
உன்னை
மொழிகளுக்கெல்லாம்
முதன் மொழி என்றாய்
அதனால்
உன்னை முதலாக
போட்டு வியாபாரம்
தொடங்கிவிட்டான
தமிழன்
சீழ்பிடித்த
கொப்புளங்களை
எல்லாம்
தாயின்
மார்பகங்களாய்
நினைக்கிறான
அன்று நீ
சங்கப்பலகை என்னும்
அரியாசனத்தில் அழகியாய்
வீற்றிருந்தாய
இன்றோ
எங்கள்
கடைப்பலகையில் கூட
நீ கால்வைக்க
இடமில்ல
கோயிலுக்குள்ளே
நீ குடியேற
முடியவில்ல
வாயிலுக்கு
வெளியே
உன்னை
வைத்துவிட்டு
செல்கின்றார்
செருப்பை போ
வழக்காடு
மன்றத்தில்
குற்றவாளிகளுக்கு
கூட
கூண்டுகள்
உண்ட
நீ
நுழையமட்டும்
அனுமதியில்ல
அம்மா தாயே
என்னும்
பிச்சைகாரர்
வாயில்
மட்டும்தான்
நீ இருக்கின்றாய
தெருவெங்கும்
தமிழ் முழக்கம்
செழிக்கச்செய்வோம்
என்ற பாரதிய
உன் கனவை
நாங்கள்
நிறைவேற்றி
வைத்துவிட்டோம
வந்து பார்
இப்போது
தமிழ்
தெருவில்தான்
நிற்கிறத
தமிழனுக்கு
தேசிய
கீதமே
தாலாட்டுதான
மதம்
சாதி
திரைப்படம்
என்று
இவனுக்குதான்
எத்தனை
படுக்கைகள
தமிழன்
ஒன்று
கும்பகர்ணனாக
இருக்கிறான்
இல்லையென்றால்
வீடணாக
இருக்கிறான
இளைஞனிடம்
விழிப்புணர்ச்சி
வேண்டுமென்றால
நாங்கள்தான்
பெண்களை
கண்டால்
விழி புணர்ச்சி
செய்கிறோமே
என்கிறான
தமிழன்
விழித்திருக்கும்
போது கூட
திரைப்பட அரங்குகள்
என்ற இருட்டறையிலேயே
இருக்கின்றான
இவனுக்கு
பெரியதிரை
பெரிய வீடு
சின்னத்திரை
சின்ன வீட
இந்த வீடுபேற்றிற்காக
இவன்
அறத்தையும்
இழந்துவிட்டான்
பொருளையும்
இழந்துவிட்டான
அகமிழந்தான்
பொருளிழந்தான்
ஆன்மாவை
விற்றுவிட்டான்
முகமிழந்தான
தன்னுடைய
முகவரியையும்
இழந்துவிட்டான
எனக்கு
வீடெங்கே
வினையெங்க
எனக்கேட்டு நின்ற
ஏடெங்கே
எழுத்தெங்க
இன உணர்வு
பெற்றிருந்த நாடெங்கே
வீடெங்க
உன் புதல்வர்
கண்டிறிந்த
சூடெங்கே
சொரணை எங்கே
சொப்பனமாய் போனத
இந்த
நாட்டில்
நடிப்பவர்கள்தான்
தலைவர்களாகிறார்கள்
அல்லது
தலைவர்களாக
இருப்பவர்கள்
நடிக்கிறார்கள
தமிழா
விழித்துக்கொள
இல்லையென்றால்
வெள்ளித்திரைக்கென்று
உன் வேட்டியை
உருவி கொண்டு
சென்றுவிடுவார்கள்...
Subscribe to:
Posts (Atom)